New Update
/indian-express-tamil/media/media_files/Z5uxvEgSZ9M1HqecQIHi.jpg)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. ஸ்கூபா டைவிங் வீரர்கள் இந்த ஆதாரங்களை மீட்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய ஆதாரங்கள் கொசஸ்தலை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஜூலை 5ஆம் தேதி மாலை அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியுள்ளனர். இந்த நிலையில் கொலையாளிகள் கொடுத்த தகவலின் பேரில் கொசஸ்தலை ஆற்றில் இருந்து முக்கிய ஆதாரங்களான செல்போன் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கைதான ஹரிஹரன் தந்த தகவலின் பேரில், 5 செல்போன்களும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலமாக கொசஸ்தலை ஆற்றில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த வழக்கில் அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரும் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.