/indian-express-tamil/media/media_files/2024/11/04/mDX1z6flRK3uFUlSTAKR.jpg)
தீபாவளி விடுமுறை முடிந்து ஒரே நேரத்தில் ஏராளமான பொதுமக்கள் சென்னை நோக்கி வருவதால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்றனர். குறிப்பாக சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மக்கள் சென்றனர். இந்நிலையில், தீபாவளி விடுமுறை முடிந்து விட்டதால், மீண்டும் சென்னை நோக்கி பொதுமக்கள் வருகின்றனர்.
இதன் காரணமாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும், நகர பேருந்துகளிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இதேபோல், தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச் சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் ரயில் சேவையையும் ஏராளமான பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.