Advertisment

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்; ஸ்கைவாக் வடிவமைப்பு தயார்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஸ்கைவாக்; வடிமைப்பை தயார் செய்த கும்டா

author-image
WebDesk
May 27, 2023 21:08 IST
kilambakkam bus terminus

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்

சென்னை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறப்பு விழாவிற்கு தயாராகிவிட்ட நிலையில், பொதுமக்களுக்கு தடையில்லா இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) நிதி ஒதுக்கீடு செய்து, ஸ்கைவாக் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழகம் (கும்டா - CUMTA) ஸ்கைவாக் கான்செப்ட் டிசைனை உருவாக்கியுள்ளது.

Advertisment

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்க ஏதுவாக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ஜூன் இறுதி அல்லது ஜூலை இறுதிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த பேருந்து நிலையத்தில், தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 65,000 பயணிகள் தென் மாவட்டங்களில் இருந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில், இந்த எண்ணிக்கை 1 லட்சம் வரை இருக்கும்.

இதையும் படியுங்கள்: ரூ 400 கோடி; 15 ஏக்கரில் புதிய சட்டமன்ற வளாகம்: புதுவையில் ஏற்பாடுகள் ரெடி

இந்தநிலையில், பயணிகள் பரபரப்பான ஜி.எஸ்.டி சாலையைக் கடக்கவும், அதன் எதிரே உள்ள முன்மொழியப்பட்ட ரயில் நிலையத்துடன் பேருந்து நிலையத்தை இணைக்கவும், கும்டா மற்றும் சி.எம்.டி.ஏ ஆகியவை ஸ்கைவாக்கைப் பரிந்துரைத்தன. ஸ்கைவாக், ரயில் நிலையம் போன்றவற்றுக்கு 1.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த திட்ட நிறுவனம் சமீபத்தில் நிதி அளித்துள்ளது. "இப்போது, ​​நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இது முடிந்ததும், ஸ்கைவாக் பணிக்கு டெண்டர் கோருவோம். இது ஒரு வருடத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுதான் கட்டமைப்பிற்கு நாங்கள் வைத்திருக்கும் காலக்கெடு" என்று கும்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்கைவாக் என்ற கான்செப்ட் டிசைனை கும்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. ஆரம்ப வடிவமைப்பின்படி, இது 450 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம் கொண்டது. மேலும், ஒரு மணி நேரத்தில் 5,000 பேர் பயணிக்க முடியும். "நாங்கள் ஒரு டிராவலேட்டரைத் திட்டமிடுகிறோம், அதாவது ஸ்கைலைட்டுடன் மூடப்பட்ட கூரை, இருக்கை பகுதி மற்றும் சில்லறை விற்பனை நிலையம். அதில் பல இடங்களில் தரையிறக்கங்கள் இருக்கும், அவற்றில் ஒன்று ஜி.எஸ்.டி சாலையை நோக்கி, சாலையைக் கடக்க மக்களுக்கு உதவும், ஒன்று ரயில் நிலையத்தை நோக்கி இருக்கும், ஒன்று பிரதான முனையத்திற்குள் இருக்கும். இன்னொன்று MTC நிறுத்துமிடத்தில் இருக்கும்" என்று கும்டா தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், முன்மொழியப்பட்ட நிலையத்திற்கான வடிவமைப்பில் ரயில்வே செயல்பட்டு வருவதாகவும், அது விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கும்டா வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chennai #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment