/tamil-ie/media/media_files/uploads/2023/06/RN-Ravi-5.jpg)
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக டி.ஜி வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநரின் செயலாளராக கிர்லோஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண் இயக்குநராக டி.ஜி வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆனந்த் பாட்டீல் மத்திய அரசின் பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, கிர்லோஷ்குமார் ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகையில் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.
இதில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, “சுதந்திர போராட்ட வீரர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்தது பெருமை. இனி ஆண்டுதோறும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்படுவார்கள்” என்றார்.
மேலும், “அறியப்படாத தியாகிகள் 91 பேர் இருப்பதை உறுதி செய்துள்ளோம். இந்த மாளிகை சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான வீடு. தியாகிகளுக்காக கவர்னர் மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.