கே.என். நேருவை குறி​வைத்த இ.டி: கண்டு கொள்ளாத தி.மு.க தலைமை; புலம்பும் ஆதரவாளர்கள்

கே.என்.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இது குறித்து தி.மு.க. தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளியாகவில்லை.

கே.என்.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இது குறித்து தி.மு.க. தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளியாகவில்லை.

author-image
WebDesk
New Update
KN Nehru DMK Trichy Enforcement Directorate Tamil News

கே.என்.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இது குறித்து தி.மு.க. தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளியாகவில்லை.

தி.மு.க மூத்த அமைச்​சர்​களின் ஒரு​வர் கே.என்.நேரு. இவரது மகன் அருண் நேரு பெரம்​பலூர் தொகுதி எம்​பி-​யாக இருக்​கி​றார். இந்நிலை​யில், கடந்த 7 ஆம் தேதி தொடங்கி 3 நாட்​கள், அமைச்​சர் நேரு​வின் சகோ​தரர்​களான ரவிச்​சந்​திரன், மணிவண்​ணன் மற்​றும் அருண் நேரு ஆகி​யோரை குறி​வைத்து அமலாக்கத்துறை அதிரடி ரெய்​டு​களை நடத்​தி​யது. இதன் முடி​வில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் நடந்​திருப்​ப​தாக உறு​திப்​படுத்தியுள்ளது அமலாக்​கத்​துறை. 

Advertisment

இதில் அமைச்​சர் நேரு​வுக்​கும் அவரது மகன் அருண் நேரு​வுக்​கும் உள்ள தொடர்​பு​களை​யும் பட்டியலிட்டுள்ளது. இதனிடையே, அமைச்​சரின் சகோ​தரர் ரவிச்​சந்​திரனை விசா​ரணைக்கு நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று வாக்குமூலம் பெற்றது. பின்னர் விசாரணைக்கு ஆஜராகும்​படி அமலாக்​கத்​துறை சம்​மன் அனுப்​பிய​போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டிருப்பதாகக்கூறி அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார்.

கே.என்.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை இத்​தனை அதிரடிகளை எடுத்து வரும் நிலை​யில், இது குறித்து தி.மு.க. தலை​மையி​லிருந்து சம்​பிர​தாய​மாகக் கூட எவ்​வித கண்டன அறிக்​கை​யும் வெளியாகவில்லை. அமைச்​சர் செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை இத்​தகைய நடவடிக்​கையை மேற்​கொண்டபோது தி.மு.க பொங்கி எழுந்து கடும் கண்​டனம் தெரி​வித்​தது. அவருக்கு ஜாமீன் மறுக்​கப்​பட்ட போதும் தி.மு.க தலைமை பல்​வேறு சட்ட நடவடிக்​கை​களை எடுத்​தது.

ஆனால், அவரை விட சீனிய​ரான கே.என்​.நேருவை குறி​வைத்து அமலாக்​கத்​துறை காட்டி வரும் அதிரடிகளுக்கு தி.மு.க தலைமை எவ்​வித கண்​டன​மும் தெரிவிக்​க​வில்​லை. நேரு​வுக்கு ஆதர​வாக தி.மு.க-வில் உள்ள சட்ட அமைச்​சர், அமைப்​புச் செய​லா​ளர் உள்​ளிட்​டோர் கூட வாய் திறக்​க​வில்​லை. நேருவை அமலாக்​கத்​துறை நடவடிக்கை விவ​காரத்​தில் இப்​படி ஒரேயடி​யாய் கைவிட்​டிருப்​பது அவரது ஆதர​வாளர்​களை கவலை​கொள்​ளச் செய்​துள்​ளது.

Advertisment
Advertisements

நேருவை கண்​டு​கொள்​ளாதது ஒரு​புறமிருக்க, திருச்சி அரசி​யலில் அவரோடு எதிரும் புதிரு​மாய் நிற்​கும் திருச்சி சிவா எம்.​பி-யை துணை பொதுச்​செய​லா​ளர் பதவி​யில் இந்த நேரம் பார்த்து அமர்த்தி இருப்​பதும் நேரு விசு​வாசிகளை கொந்​தளிக்க வைத்​திருக்​கிறது. ஏற்​கெனவே ஒட்​டுமொத்த திருச்சி மாவட்​ட​மும் நேருவின் கட்​டுப்​பாட்​டில் இருந்​தது. அதை மூன்​றாகப் பிரித்து உதயநி​தி​யின் நண்​ப​ரான அமைச்​சர் அன்​பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆக்​கப்​பட்​டார். அத்​துடன் நேரு​வுக்கு இணை​யாக அன்​பில் மகேஸ் பொய்யாமொழிக்​கும் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்​டது. தற்​போது திருச்சி சிவாவுக்கு தலை​மைக் கழக பதவி வழங்​கப்​பட்​டிருப்​ப​தால் தி.மு.க-வில் நேரு​வுக்​கான முக்​கி​யத்​து​வம் குறித்து கேள்வி எழுப்​பு​கி​றார்​கள்.

செந்​தில் பாலாஜிக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை நடவடிக்கை எடுத்தபோதே, “யாரை​யும் நிம்​ம​தியா இருக்​க​விட​மாட்​டாங்க போல. பாலாஜி மாதிரி நம்​மாள எல்​லாம் ஜெயிலுக்​குப் போக​முடி​யாதுப்​பா” என்று தனது சகாக்​கள் மத்​தி​யில் ஜாலி​யாகப் பேசிய நேரு, மத்​திய அரசின் விசா​ரணை அமைப்​பு​கள் தன் பக்​கம் திரும்பாமல் இருக்க ஒருசில தற்​காப்பு நடவடிக்​கை​களை​யும் மேற்​கொண்​ட​தாகச் சொல்​கி​றார்​கள். 

இது சம்​பந்​த​மாக சிலர் தலை​மை​யிடம் ஏடாகூட​மாகப் போட்​டுக் கொடுக்​கவே, அதுகுறித்து தலைமைக்கு கே.என்.நேரு தன்​னிலை விளக்​க​மும் அளித்​த​தாகச் சொல்​கி​றார்​கள். கே.என்.நேரு விவ​காரத்​தில் தலைமை மவுனம் காப்​ப​தன் பின்​னணி​யோடு இந்த விவகாரங்களையும் இப்போது முடிச்சுப் போட்டுப் பேசுகிறார்கள். 

ஆனால் நேரு ஆதர​வாளர்​களோ, “எப்​போதும் தலை​மைக்கு விசு​வாச​மான​வ​ராக இருக்​கும் கே.என்.நேருவை யாரும் நெருங்க முடியாது, எந்தவித நெருக்​கடிகளுக்கு அஞ்​சாதவர். எத்​தனை சோதனை​கள் வந்​தா​லும் அஞ்​சாமல் தி.மு.க-வுக்​கும் தலை​வ​ருக்​கும் பக்​கபல​மாக நிற்​பார். தனது வீடு உள்பட தனது குடும்பத்தாரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்த நேரத்திலும் கெத்தாக சட்டமன்றத்தில் வழக்கமான நடவடிக்கைகளில் தனது கவனத்தை செலுத்தியிருந்தார். திருச்சி மாவட்​டத்தை மூன்​றாகப் பிரித்​தா​லும் நேருவை முதன்​மைச் செய​லா​ள​ராக்கி அழகு பார்த்​தவர்தான் தலைவர் ஸ்டா​லின்" என்றனர் பெருமையாக.

செய்தி: க.சண்முகவடிவேல்.

Trichy Dmk K N Nehru

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: