'படிக்கும் மேஜையில் சரஸ்வதி படம்; நிச்சயம் அறிவு பெருகும்': ஆளுநர் ரவி பேச்சு

"படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

"படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்" என்று தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
TN governor RN Ravi accusations universities having only dravidian history not freedom fighters Tamil News

'கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வணங்கி வந்தால் மாணவ - மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்' என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு சென்றார். அங்கு அவர் மாணவ- மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது “எத்தனை பேர் கல்விக் கடவுளான சரஸ்வதியின் படத்தை படிக்கும் மேஜையில் வைத்து உள்ளீர்கள்?” என கேள்வி எழுப்பினார். 

Advertisment

அதற்கு மாணவர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, “இனிவரும் காலங்களில் படிக்கும் மேஜையில் கடவுள் சரஸ்வதியின் புகைப்படத்தை வைத்து வணங்கி விட்டு, படித்தால் நிச்சயம் அறிவு பெருகும்” என்று அறிவுறுத்தினார். மேலும் சரஸ்வதி வந்தனம் பாடல், பள்ளியில் பாட பழக்கப்படுத்த வேண்டும்" என்றும் அவர் பள்ளி நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Kodaikanal Governor Rn Ravi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: