கொடநாடு வழக்கு: சயானிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை

சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு சம்மன் அனுப்பி, வியாழக்கிழமை (இன்று) கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு சம்மன் அனுப்பி, வியாழக்கிழமை (இன்று) கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

author-image
WebDesk
New Update
Kodanad case investigation

Kodanad case

நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரப்பெருமாள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து, கடந்த 17ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சயானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அன்று அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் ஒரு சம்மன் அனுப்பி, வியாழக்கிழமை (இன்று) கோவையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

Advertisment
Advertisements

அதனை ஏற்று, சயான் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜரானார். யான் இடம் அறியப்படாத இரண்டாவது செல்போன் தொடர்பாக விசாரணையானது நடைபெற்று வருகிறது. தற்போது அவரிடம் தொடர்ந்து  விசாரணையின் முடிவில் இவ்வழக்கில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: