New Update
/indian-express-tamil/media/media_files/LBvb12sgSP47ztOhuasU.jpg)
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை மண்ணை கொண்டு மாதிரி போல் வடிவமைத்து நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியும் உயிருக்கு போராடுபவர்களுக்காக பிராத்தனையும் மேற்கொண்டுள்ளார் கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் யு.டி.எம் ராஜா.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். பலரும் மண்ணுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை காப்பாற்றும் பணியில் பல்வேறு இராணுவத்தினர் ஈடுப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்களும் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற தங்க நகை வடிவமைப்பாளர் வயநாட்டில் ஏற்ப்பட்ட நிலச்சரிவை போலவே மண்ணில் மாதிரியை உருவாக்கி உள்ளார். வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமெனவும், உயிருக்கு போராடும் மக்களுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.