நிலுவை ஊதியம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதிய அடிப்படையில் ஓட்டுநர்கள், உதவியாளர்கள், மின் துறை ஊழியர்கள் என சுமார் 250க்கும் மேற்பட்டஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
/indian-express-tamil/media/post_attachments/fae8f0a2-ba1.jpg)
இவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதேபோல ஆறு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்படும் பணி நியமன ஆணையும் வழங்காததால் இப்பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
இருப்பினும் நடவடிக்கை எடுக்காததால் தொழிலாளர் தினத்தையொட்டி தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் பாரதியார் பல்கலைக்கழக பணியாளர்கள் நலச்சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக பல்கலைக்கழக வளாகத்திற்குள் கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/73bb4148-a3d.jpg)
இதில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நான்கு மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். பணி நியமன ஆணை வழங்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பி.ரஹ்மான், கோவை