கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ள நிலையில், கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ள நிலையில், கோவையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

author-image
WebDesk
New Update
sadag

கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கும் என சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு குறுஞ்செய்தி சென்றுள்ள நிலையில், கோவையில்  போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

 சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு இமெயில் மூலம், குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில்  கோவையில் பல்வேறு  இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும் அந்த இ-மெயிலில் பாஜக அலுவலகம் - மோடி ஒழிக என்ற வாசகங்களும் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து கோவை மாநகர காவல் துறையினர் நேற்று இரவு முழுவதும் பாதுகாப்பு பணியை பலப்படுத்தினர்.

 குறிப்பாக கோவை காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகம் உட்பட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இ-மெயில் குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது  போலீஸ் தகவலாக  தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என காவல்துறை வட்டாரம் தகவல் கூறப்படுகின்றது.

Advertisment
Advertisements

 செய்தி: பி ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: