மோடிக்கு கோவை சிறுவன் கோரிக்கை; அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்தில் இதிகாசம் பாட விருப்பம்

கோவையை சேர்ந்த ஏழு வயது சிறுவன் முழு ராமாயண இதிகாச கதையை குறைந்த நேரத்தில் கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

கோவையை சேர்ந்த ஏழு வயது சிறுவன் முழு ராமாயண இதிகாச கதையை குறைந்த நேரத்தில் கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Kovai boy request to Modi, Ayodhya Ram Temple opening ceremony, Idhihas sings boy, மோடிக்கு கோவை சிறுவன் கோரிக்கை, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் இதிகாசம் பாட விருப்பம், Kovai boy, Ayodhya Ram Temple opening ceremony

சிறுவன் சௌரவ் சிவக்குமார்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ராமாயண இதிகாசத்தை பாட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு 7 வயது கோவை சிறுவன் கோரிக்கை விடுதுள்ளார்.

Advertisment

கோவையை சேர்ந்த ஏழு வயது சிறுவன் முழு ராமாயண இதிகாச கதையை குறைந்த நேரத்தில் கூறி உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.

publive-image
சிவகுமார் மற்றும் மலர்விழி தம்பதியரின் மகன் சௌரவ் சிவகுமார்

கோவையை சேர்ந்த சிவகுமார் மற்றும் மலர்விழி தம்பதியரின் மகன் சௌரவ் சிவகுமார். ஏழு வயதான சிறுவன் சௌரவ் சிறு வயது முதலே ஆன்மீக கதைகளை ஆர்வமுடன் கேட்டு வந்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் இவரது ஆர்வத்தை கவனித்த பெற்றோர், இராமயண இதிகாச புராணத்தை தமிழில் இவருக்கு சொல்லி கொடுத்துள்ளனர்.

இதை ஆழமாக கவனித்த சிறுவன் முழு கதையையும் மனதில் உள்வாங்கி,அதை அப்படியே சிறிதும் பிறழாமல் அதே சமயத்தில் வேகமாக பிறருக்கு புரியும் படி கூற துவங்கியுள்ளார்.

publive-image
சௌரவ் சிவகுமார்

இவரது அரிய திறமையை கண்ட இவரது பெற்றோர் அளித்த தொடர் பயிற்சியில் , ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி மற்றும் ஆதிசங்கரர் ஜெயந்தியை முன்னிட்டு சிறுவன் சௌரவ் முழு இராமாயண இதிகாச கதையை சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் கம்பராமாயணத்தின் பாலகாண்டம முதல் யுத்த காண்டம் வரை ஒரு மணி நேரம் 37 நிமிடத்தில் சொற்பொழிவாக கூறி அசத்தியுள்ளார்.

ஏழு வயதே ஆன சிறுவனின் இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. சிறுவனின் சாதனையை பாராட்டி இந்தியா உலக சாதனை புத்தகம் இவருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கவுரவித்துள்ளது.

publive-image

இதற்கு முன்னர் கலாம் புக் ரெக்கார்ட்ஸ் இவரது ராமாயண சாதனையை பாராட்டி அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு ராமாயண கதையையும் எழுத்து தமிழில் வெறும் 40 நாளில் பேச தயாராகி சாதனை படைத்த சிறுவன் சௌரவிற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 7 வயது சிறுவன் சௌரவ் கூறும் போது, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ராமாயண இதிகாசத்தை நான் பாட வேண்டும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செய்தி: பி.ரஹ்மான்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: