கோவை மத்திய சிறையில் கைதிகள் வீடியோ கால் பேச ஏழு மொபைல் போன்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை எஸ். பி செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.
கோவை மத்திய சிறையில் 2000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்துவது தண்டனைக்கு பின் சுய தொழில் செய்யவும் சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் கைதிகள் தங்களது உறவினர்களிடம் பேச மொபைல் போன் பயன்படுத்த சிறை நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட கைதிகள் சிறை அலுவலர்கள் முன்னிலையில் மொபைல் போனில் பேசி வருகின்றனர்.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/e9eca54a-eba.jpg)
கைதிகள் மொபைல் போனில் தங்களது உறவினர்களிடம் பேச சிறையில் மாதம் தோறும் 90 நிமிடம் சிறைத்துறை அனுமதி வழங்கி உள்ளது. தற்போது மேலும் 30 நிமிடம் கூடுதலாக பேச அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
![](https://img-cdn.thepublive.com/filters:format(webp)/indian-express-tamil/media/post_attachments/610e9853-089.jpg)
இனி மாதம் தோறும் ஒவ்வொரு கைதியும் 120 நிமிடம் மொபைல் போனில் பேசிக்கொள்ளலாம். பேசுவது மட்டும் இன்றி வீடியோ காலம் செய்து கொள்ள கொள்ளலாம், அதற்காக கோவை சிறைக்கு புதியதாக ஏழு மொபைல் போன்களை வழங்கியுள்ளது.
இந்த மொபைல் போன்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் நீண்ட காலம் சிறையில் உள்ள கைதிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ காலில் பேசும் அனுமதி மன நிம்மதி அடைகின்றனர்.சிறை நிர்வாகமே அனுமதி வழங்குவதால் சிறையில் முறைகேடு மொபைல் போன்கள் பயன்படுத்துவது தவிர்க்கப்படுகிறது. சிறையில் முறைகேடு மொபைல் போன்கள் பயன்படுத்துவதை தடுக்க ஜாமர் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக ஜாமர் அமைக்க திட்டமிட்டுள்ளது என்று செய்தி குறிப்பில் தகவல் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“