/indian-express-tamil/media/media_files/2024/12/19/VrGoznlOJOSYdbMcuhOT.jpg)
ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
கோவை ஆலந்துறை, நல்லூர்வயல் அருகே முட்டுத்துவயல் பகுதியில் நேற்று இரவு 11:30 மணிக்கு ஆடிட்டர் குரு என்பவர் தோட்டத்தில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை கண்டு அங்கு உள்ள நாய்கள் குரைக்க தொடங்கியது.
தன்னை பார்த்து குரைத்த நாய்களை அந்த யானை துரத்தி செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
குரைத்ததால் ஆத்திரம் நாய்களை துரத்திய ஒற்றை காட்டு யானையின் சிசிடிவி காட்சிகள்...#Coimbatore#elephantattackpic.twitter.com/9dRoHGYNrJ
— Indian Express Tamil (@IeTamil) December 19, 2024
அப்பொழுது அங்கு நிறுத்தி இருந்த சைக்கிள் மற்றும் கால்நடைகளுக்கு வைத்து இருந்த தண்ணீர் கேன் ஆகியவற்றை யானை காலால் உதைத்து விட்டு அதன் அருகில் வைத்து இருந்த புண்ணாக்கு மூட்டையை காலால் மிதித்து ஃபுட்பால் ஆடி மூட்டையை உடைத்து ஒரு வாய் தின்று பார்த்தது.
அதற்குப் அந்தப் புண்ணாக்கு பிடிக்கவில்லை போல், அதனால் துதிக்கையால் புண்ணாக்கை கீழே கொட்டியது, பிறகு அந்த வெறும் சாக்கு கவரை வாயில் கவ்விக் கொண்டு அங்கு இருந்து சென்றது. இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.