/indian-express-tamil/media/media_files/2024/12/13/inHPDYGa3cSKu9ir00bO.jpeg)
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மதுக்கரை, குரும்பபாளையம் தடுப்பணையில் மழைநீர் நிறைந்து செல்கிறது.
இந்தத் மழைநீரில் மதுக்கரை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவுகள் போன்ற கழிவுகள் அதில் கலப்பதால் தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீரில் மலைபோல் நுரை தேங்கி காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசடைவதுடன் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் என கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள கால்நடைகள், மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், அப்பகுதி நிலத்தடி நீர் மாசடைவதற்கு முன்பு கழிவு நீர் கலப்பதை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள மற்ற குளங்கள் தூய்மைப்படுத்தப்படுவது போன்று இந்த தடுப்பணையையும், தூய்மைப்படுத்தி அதில் கலக்கும் கழிவு நீரை தடுத்து நிறுத்த தமிழக அரசும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.