வெங்காயம், தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி விலை தொடர் வீழ்ச்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தரையில் கொட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Advertisment
கடந்த சில மாதங்களாக தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கிட்டத்தட்ட 25,000 ஹீட்டர் பரப்பளவில் நடவு
செய்யப்பட்ட சின்ன வெங்காயம், தக்காளி அறுவடை காலங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் விவசாயம் செய்த கூலி கூட கிடைக்க பெறாமல் இருப்பதாகவும் கூறி அரசு, தோட்டக்கலை அலுவலர்களை நியமனம் செய்து பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க செய்து அரசாங்கமே சின்ன வெங்காயத்தினை கொள்முதல் செய்ய நியாய விலை கடை மூலமாக விற்பனை செய்யவும் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிடவும் கோரிக்கை விடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
செய்தி: ரகுமான், கோவை
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.