தமிழகத்தில் மீன்ப்பிடி தடைக்காலம் உள்ள நிலையில் கோவை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் மீன்கள் வருகிறது. தமிழகத்தில் கடந்த"15 ஆம் தேதி முதல் மீன்ப்பிடி தடைக்காலம் போடப்பட்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய மீன்களின் வரத்து குறைந்துள்ளது. பெரும்பாலான மீன்கள் கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகிறது. இதனால் வழக்கத்தை விட மீன் விலை அதிகரித்துள்ளது.
வழக்கமாக ரூ.700 முதல் 800க்கு விற்பனையாகும் வஞ்சம் மீன் ரூ.1200 க்கும், மத்தி மீன் மொத்த மார்க்கெட்டிலேயே 180 முதல் 200 க்கு விற்பனையாகி வருகிறது. வரும் 30"ஆம் தேதிக்கு பின் தமிழக மீன்கள் வர உள்ள நிலையில் அதன் பிறகு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மீன் பிடித்தடை காலம் துவங்குவதால் தொடர்ந்து விலை உயர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை