கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயற்சி செய்ததாக காவலாளிகள் ஒருவரை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை சிட்ரா பகுதியில் தனியார் - (கேஎம்சிஎச் ) மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளது.இந்த மருத்துவமனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது.அப்போது அங்கிருந்த மருத்துவமனை காவலாளிகள் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.பின்னர் காயமடைந்த அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் பீளமேடு போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காந்திமாநகர் பகுதியை சேர்ந்த ராஜா என்ற மணி என்பவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் காந்திமா நகர் பகுதியில் சேர்ந்த ராஜா என்ற மணி என்பவரும் ஏற்கனவே குற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.இதனை அடுத்து பீளமேடு காவல் நிலையத்தில் ராஜாவின் மனைவி சுகன்யா புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காவலாளி உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து அவரது மனைவி தெரிவிக்கையில் சிகிச்சைக்காக அங்கு சென்றவரை அடித்து கொலை செய்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“