கோவை சுதந்திர தின விழா; தேசப்பற்று நடன நிகழ்ச்சியில் அசத்திய பள்ளி மாணவர்கள்

கோவையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாட்டம்; தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்; பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பொதுமக்கள்

கோவையில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாட்டம்; தேசிய கொடியை ஏற்றிய மாவட்ட ஆட்சியர்; பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த பொதுமக்கள்

author-image
WebDesk
New Update
kovai iday1

கோவை வ.உ.சி மைதானத்தில் 79ஆவது சுதந்திர தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பவனார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர் ஆகியோர் இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

Advertisment

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி நிறத்திலான மூவர்ண பலூன்கள் காற்றில் பறக்க விடப்பட்டன. மேலும் அமைதியின் சின்னமாக வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறை, மருத்துவ துறை உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

Advertisment
Advertisements

இதனை அடுத்து, வாகா எல்லையில் நடத்தப்படுவது போன்ற சிறப்பு அணி வகுப்பு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தேசப்பற்று நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை பொதுமக்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பத்தினர், பள்ளி மாணவ மாணவிகள் என பலரும் கண்டுகளித்தனர்.

Independence Day kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: