/tamil-ie/media/media_files/uploads/2022/12/Kovai-kutralam.jpeg)
கோவை குற்றாலம் அருவி (படங்கள்: பி.ரஹ்மான், கோவை)
தொடர்மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியத்திலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் மற்றும் தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் நொய்யல் ஆற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-14-at-13.55.05-1.jpeg)
இதையும் படியுங்கள்: வன வாசத்திற்கு பின் மீண்டும் தாய் கட்சிக்கு வந்துவிட்டேன்.. ம.நீ.ம. முன்னாள் பொதுச் செயலாளர்
/tamil-ie/media/media_files/uploads/2022/12/WhatsApp-Image-2022-12-14-at-13.55.06-1.jpeg)
இதனிடையே கோவை குற்றாலம் அருவிக்கு வழக்கத்தைவிட நீர் அதிகமாக ஆர்ப்பரித்து செல்வதாலும், இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாலும் மறு அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.