/tamil-ie/media/media_files/uploads/2023/09/Kovai-Agri-event.jpeg)
விவசாயிகளுக்கு 40% மானியத்தில் 72.58 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள்; கோவை எம்.பி வழங்கினார்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் கோவையில் ரூ.72.58 லட்சம் மதிப்பில் வேளாண் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறையின் மூலமும், வேளாண் இயந்திர மயமாக்கும் துணை இயக்கத் திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மூலமும், கிராம மக்களுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதையும் படியுங்கள்: உழவன் எக்ஸ்பிரஸ் 10 ஆண்டுகள் நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!
/tamil-ie/media/media_files/uploads/2023/09/WhatsApp-Image-2023-09-04-at-13.29.18.jpeg)
அதன்படி கோவை மாவட்டத்தில் 82 பவர் டில்லர்கள் மற்றும் 7 பவர் வீடர்கள் இயந்திரங்கள் 72.58 லட்சம் ரூபாய் மதிப்பில் விவசாயிகளுக்கு 40% மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50% மானியத்தில் வழங்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இந்த இயந்திரத்தை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உட்பட கோவை மாவட்ட வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.