Advertisment

கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த காவலருக்கு தங்க மோதிரம்; பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

கங்கனா ரனாவத் விவகாரம்; விவசாயிகள் பக்கம் நின்று துணிவோடு எதிர்வினை ஆற்றிய "குல்விந்தர் கவுருக்கு” பாராட்டுத் தெரிவித்த பெரியார் திராவிடர் கழகம்; தங்க மோதிரம் பரிசாக அனுப்பி வைப்பு

author-image
WebDesk
New Update
Gold ring Periyar

"குல்விந்தர் கவுருக்கு” பாராட்டுத் தெரிவித்த பெரியார் திராவிடர் கழகம்; தங்க மோதிரம் பரிசாக அனுப்பி வைப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர் குல்விந்தர் கவுருக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

பஞ்சாபில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும், இழிவாகவும் சித்தரித்து பேசிய, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத்தை சண்டிகர் விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் காவலர் குல்விந்தர் கவுர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். 

தன் தாய் விவசாயிகள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர். தன் தாயையும் தீவிரவாதி என்று சொன்னார் என்பதால் அறைந்தேன் என்று குல்விந்தர் கவுர் கூறியிருக்கிறார்.

விவசாயிகளின் உரிமைக்காகவும் மாநிலத்தின் நலனுக்காகவும் போராடியவர் இந்த காவலரின் தாயார். விவசாயிகள் பக்கம் நின்று தனி ஒரு வீராங்கனை ஆக துணிவோடு எதிர்வினை ஆற்றிய "குல்விந்தர் கவுருக்கு" தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் "தந்தை பெரியார்” படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பி வைக்கிறோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kangana Ranaut kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment