/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-28-at-11.04.05.jpeg)
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோவை மாவட்ட அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-28-at-11.04.05.jpeg)
இதனிடையே கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.இதனால் கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது.
இதனிடையே பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. பி.எஃப்.ஐ-யின் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என மத்திய அரசு அறிவிப்பு.பி.எஃப்.ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-28-at-11.04.04-1.jpeg)
பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைமை அலுவலகத்தில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் துணை ஆணையாளர் மாதவன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-Image-2022-09-28-at-11.04.03.jpeg)
கோவையில் பதற்ற நிலை சற்றே தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி : ரகுமான்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.