பிரதமர் நரேந்திர மோடி கோயம்புத்தூரில் நடைபெறும் சாலை வாகன பேரணி நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்ள உள்ளார்.இதற்காக மாலை 5.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் விமான நிலையம் வரும் பிரதமர், 5.45 மணிக்கு பேரணி துவங்கும் இடமான சாய்பாபா கோவில் சந்திப்பிற்கு வருகை தர உள்ளார்.
Advertisment
அங்கிருந்து சுமார் 2.5 கிலோ மீட்டர் பேரணி நடைபெற உள்ளது. இந்த பேரணியின் போது பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சாலையின் இரு புறமும் நின்று வரவேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.ஆங்காங்கே மேடைகள் அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணியின் நிறைவாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையம் அருகே 1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக மலரஞ்சலி செலுத்துகிறார்.
பிரதமரின் வாகன பேரணி நிகழ்ச்சிக்காக கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பேரணி நடைபெறும் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர். பிரதமர் கலந்து கொள்ளும் வாகன பேரணியை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் தொடர்ந்து மேட்டுப்பாளையம் சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியை நோக்கி வந்து கொண்டுள்ளனர்.
உரிய பரிசோதனைகளுக்கு பிறகு பொதுமக்கள் சாலைகளின் இருபுறமும் நின்று வரவேற்பதற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இன்று இரவு பிரதமர் கோயம்புத்தூரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். செவ்வாய்க்கிழமை காலை கோயம்புத்தூரிலிருந்து கேரளா புறப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news