/indian-express-tamil/media/media_files/H675uAjlzcbDgqJe0z8Q.jpeg)
செங்கல் சூளைகளால் யானைகள் வழித் தடங்கள், நீர்வழிப் பாதைகள் பாதிக்கப்படுகின்றன; அகற்ற வலியுறுத்தி கோவை பா.ம.க தொண்டர்கள் மண்டியிட்டு மனு
கோவை மாவட்டத்தில் தடாகம், கணுவாய், சோமையம்பாளையம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோத இயங்கி வரும் செங்கல் சூளைகளால் யானைகள் வழித் தடங்கள் பாதிக்கப்படுவதாகவும் நீர்வழிப் பாதைகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அவற்றை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பா.ம.க கோவை மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் ஒற்றை காலில் மண்டியிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும் அந்த செங்கல் சூளைகளால் அப்பகுதி பாதிக்கப்பட்டு உள்ளதை புகைப்படம் எடுத்து வந்தும், யானைகள் நீர் வழி பாதைகளை ஓவியங்களாக வரைந்து வந்தும், கண்டன பதாகைகளையும் ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.