/indian-express-tamil/media/media_files/ihF2EaxPSlZywduOeJnl.jpg)
கோவையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இம்ரான், அபுதாகிர் மற்றும் ஹக்கீம்
கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதன் பேரில் சூலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவிட்டார். அதன் பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர புலன்விசாரணை மேற்கொண்டும், பழைய குற்றவாளிகளை தணிக்கை செய்தும் விசாரணை நடத்தினர்.
அதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இம்ரான் (36), அபுதாகிர் (36), ஹக்கீம் (40) ஆகியோர்களை சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது.
இந்நிலையில் தனிப்படை போலீசார் இந்த நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சூலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 4 வழக்குகளின் சொத்துக்களான 19 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.