கோவை - பாலக்காடு நெடுஞ்சாலையில் பிடிபட்ட ரூ.71.5 லட்சம் ஹவாலா பணம்; ஆந்திராவைச் சேர்ந்தவர் கைது

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பிடிபட்ட 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம்; ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் பிடிபட்ட 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம்; ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kovai hawala money

கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற சோதனையில் 71 லட்சத்து 50,000 ரூபாய் ஹவாலா பணம் பிடிப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாஷ் என்பவர் பணத்தை கொச்சி கொண்டு செல்லும் வழியில் போலீசார் நடத்திய சோதனையில் பிடிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் பிடிப்பட்ட பணத்தையும் சிவப்பிரகாஷையும் போலீசார் வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.

கோவை பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் போதை தடுப்பு பிரிவு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்துடன் பயணம் செய்த ஆந்திராவைச் சேர்ந்த சிவப்பிரகாசை பிடித்து உள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் இந்த பணத்திற்கான முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் போலீசார் வருமான வரித் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உள்ளனர். பிடிபட்ட பணம் எங்கு இருந்து யாருக்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Andhra Pradesh kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: