Advertisment

500 ஆட்டோ நூலகங்கள் திறப்பு; கோவையில் அசத்தல் முயற்சி

500 ஆட்டோக்களுக்கு புத்தகம் மற்றும் பெட்டிகள் வழங்கி ஆட்டோவில் நூலகம் திட்டம் தொடக்கம்; கோவை காவல் ஆணையர் துவங்கி வைப்பு

author-image
WebDesk
New Update
Kovai auto library

500 ஆட்டோக்களுக்கு புத்தகம் மற்றும் பெட்டிகள் வழங்கி ஆட்டோவில் நூலகம் திட்டம் தொடக்கம்; கோவை காவல் ஆணையர் துவங்கி வைப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாநகரில் இரண்டாவது முறையாக கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 500 ஆட்டோ நூலங்களை மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்.

Advertisment

மக்கள் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தினை அதிகரிக்கும் வகையில் ஆட்டோவில் நூலகம் என்ற திட்டம் மாநகர காவல்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இரண்டாவது நிகழ்வாக 500 ஆட்டோக்களுக்கு நூலகம் அமைக்கும் நிகழ்ச்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஆட்டோக்களுக்கு புத்தகங்கள் மற்றும் அதை வைக்கும் பெட்டிகளையும் வழங்கினார்.

ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிகழ்வில் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், முதன்மை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore auto
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment