மதுரை மாவட்டம் வரிச்சியூரைச் சேர்ந்தவர் செல்வம். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்தநிலையில், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வம் கோவை, செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதைத் தொடர்ந்து பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை பிடிக்க கோவையில் 5 சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம், சூலூர், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், வாளையார் ஆகிய பகுதிகளுக்கு 5 தனிப்படை போலீசார் சென்று தீவிரமாக கண்காணித்த வருகின்றனர். செல்வபுரம் பகுதியில் 8 பேர் கொண்ட சிறப்பு பிரிவு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும், விரைவில் அவர் பிடிக்கப்பட்டு விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.