kovai police viral video : வாகன சோதனையில் ஈடுப்படும் காவலர்கள், ரோந்து போலீஸ்கள், டிராபிக் போலீஸ் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்குவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு காலம் காலமாக இருக்கும் ஒன்று. இதுக் குறித்து பல வீடியோக்கள் இதுவரை வெளியாகியுள்ளன. சில வீடியோக்கள் அடிப்படையில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
Advertisment
அந்த வகையில் கடந்த சில நாட்களாக கோவை சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன் இளைஞர்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் ரூ. 100 கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து, கடந்த சனிக்கிழமை 7 இளைஞர்கள் ஈஷா மையம் சென்றனர். இவர்கள் அனைவரும் அவர்களது ஹெல்மெட்டில் ஹெல்மெட் கேமராவை பொருத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது காருண்யா பல்கலைக்கழக பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார் அவர்களை மறித்து ஆவணங்களைச் சரி பார்த்தனர்.
அவர்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்துள்ளன. இருப்பினும்,உதவி ஆய்வாளர் மாறன், அவர்களின் தகவல்களை வாங்கிக்கொண்டு தலைக்கு நூறு ரூபாய் வீதம் 600 ரூபாய் கொடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதற்கு அந்த இளைஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து செல்வதற்காக இளைஞர்களும் 100 ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் கேமராவில் பதிவாகியது. இந்த வீடியோவை அந்த இளைஞர்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஆத்ரத்துடன் வெளியிட்டனர். சில மணி நேரங்களிலே இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு சம்மந்தப்பட்ட போலீஸ் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.