Advertisment

கோவைக்கு இனி 6 ரயில்கள் வராது; ரயில்வேக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் அறிவிப்பு

கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் வழியாக ஆறு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு; மாட்டு வண்டியில் சென்று தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள் அறிவிப்பு

author-image
WebDesk
New Update
kovai tpdk

கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் வழியாக ஆறு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு; மாட்டு வண்டியில் சென்று தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள் அறிவிப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் போத்தனூர் வழியாக ஆறு ரயில்கள் இயக்கப்படும் என்ற தென்னக ரயில்வேயின் அறிவிப்புக்கு எதிராக வருகிற மார்ச் 7 ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களும் மாட்டு வண்டியில் சென்று தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Advertisment

வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு இயக்கப்படும் ஆறு ரயில்கள் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர், போத்தனூர் வழியாக கேரள மாநிலம் பாலக்காடு செல்லும் என தென்னக ரயில்வே சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த அறிவிப்பிற்கு கோவையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்துவது குறித்தும் கோவையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், கோவையை புறக்கணிக்கும் விதமாக வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் ஆறு ரயில்களை போத்தனூர் வழியாக கேரளாவிற்கு இயக்க தென்னக ரயில்வே திட்டமிட்டு இருப்பதாகவும் இதனை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் தொடர் போராட்டங்களை முன்னெடுக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக வருகிற 29 ஆம் தேதி ரயில் பயணிகளிடம் கோரிக்கை பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் மார்ச் 7 ஆம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்களையும் ஒன்று திரட்டி காந்திபுரம் பகுதியில் இருந்து மாட்டு வண்டியில் சென்று தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் 2 நடைமேடைகள் மட்டுமே இருக்கக்கூடிய திருப்பூர் மற்றும் நான்கு நடைமேடைகள் மட்டுமே இருக்கக்கூடிய ஈரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படும் சூழலில் ஆறு நடைமேடைகள் இருக்கக்கூடிய கோவை ரயில் நிலையத்தில் ஆறு ரயில்களை மட்டும் இயக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா என கேள்வி எழுப்பியதுடன், கேரளாவிற்கு செல்லும் ரயில்கள் கோவைக்கு வந்து செல்வதால் 40 நிமிடங்கள் கேரள பயணிகளுக்கு தாமதமாகிறது என்ற காரணத்தில் அடிப்படையிலேயே கோவையை புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Indian Railways Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment