Advertisment

கோவை: பேருந்துக்குள் ஒழுகிய மழை நீரால் மக்கள் அவதி

கோவையில் மழை பெய்து வரும் நிலையில் காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகர பேருந்து மற்றும் கோபி செல்லும் வெளியூர் பேருந்தில் மழைநீர் ஒழுக்கியதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவையில் மழை பெய்து வரும் நிலையில் காந்திபுரம் பகுதியில் இருந்து மாரிசெட்டிபதி செல்லும் அரசு நகர பேருந்து மற்றும் கோபி செல்லும் வெளியூர் பேருந்தில் மழைநீர் ஒழுக்கியதன் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

Advertisment

 கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில்  மாலை நேரத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து மாரி செட்டிபதி செல்லும் அரசு நகரப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதன் காரணமாக பேருந்தில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். பேருந்தின் மேற்கூறையில் இருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் எழுந்து நின்று பயணம் செய்தனர்.

 அதில் ஒரு பயணி பேருந்துக்குள் குடையை வைத்து அமர்ந்து பயணம் செய்தது சக பயணிகளிடையே வியப்படையச் செய்தது.அதேபோன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து கோபி செல்லும் அரசு பேருந்தில் பேருந்தின் மேற்கூரையிலிருந்து வழிந்த மழை நீரால் பயணிகள் இருக்கைகளில் அமர முடியாமல் நின்றவாறு பயணம் செய்தனர். மேலும் பேருந்தில் கூட்டமாக இருந்ததன் காரணமாக மழை நீர் வழிந்ததை பொருட்படுத்தாமல் நனைந்தபடியே பயணம் செய்தனர். மழைக்காலங்களில் இவ்வாறு அரசு பேருந்துகளில் மழைநீர் ஒழுகுவதால் கடும் அவதிக்குள்ளாகிறார்கள் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment