Advertisment

சுயநலத்திற்காக சண்டையிடும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்; அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு

அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை; அ.தி.மு.க.,வில் இருந்து விலகினார் கோவை செல்வராஜ்

author-image
WebDesk
New Update
சுயநலத்திற்காக சண்டையிடும் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ்; அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவிப்பு

அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஒற்றைத் தலைமையால் அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி, இ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதில், ஓ.பி.எஸ் அணியில் இருந்த கோவை செல்வராஜ் தற்போது அ.தி.மு.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மகளிர் குழு உற்பத்தி பொருட்கள்: கோவை விமான நிலையத்தில் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர்

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தங்கள் சுயலாபத்திற்காக சண்டையிட்டு வருகின்றனர். அ.தி.மு.க என்ற பெயரில் சுயநலத்திற்காக செயல்படுவோர் மத்தியில் இருக்க விரும்பவில்லை. சுயநலவாதிகளுடன் இணைந்து பணியாற்ற மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Admk Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment