Advertisment

நெருங்கும் கோடைக் காலம்; கோவையில் களைகட்டிய தர்பூசணி விற்பனை

கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தர்பூசணி விற்பனையும் தொடங்கியுள்ளது; கோவையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க தர்பூசணி பக்கம் திரும்பிய பொதுமக்கள்

author-image
WebDesk
New Update
Kovai watermelon sale

கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில், தர்பூசணி விற்பனையும் தொடங்கியுள்ளது; கோவையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க தர்பூசணி பக்கம் திரும்பிய பொதுமக்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோடைக் காலம் நெருங்குவதை முன்னிட்டு கோவையில் தர்ப்பூசணி விற்பனை களைக்கட்டத் துவங்கியுள்ளது.

Advertisment

கோடை காலம் துவங்க உள்ள நிலையில் இப்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் உடலுக்கு குளிர்ச்சியூட்டும் உணவுகளை உட்கொள்ள துவங்கிவிட்டனர். கம்பங்கூழ், நீர்மோர், இளநீர், பழச்சாறு ஆகியவற்றை அதிகளவு அருந்த துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் வெயில் காலத்தில் அதிகமானோர் விரும்பி சாப்பிடும் தர்பூசணி விற்பனை கோவையில் துவங்கி உள்ளது. இந்த பழத்தில் நீர் சத்துக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உட்கொள்வர்.

கோவையின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தர்ப்பூசணி பழக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தர்பூசணி பழச்சாறும் கிடைக்கிறது. இதனால் பலரும் தர்பூசணி பழங்களை தர்பூசணி பழச்சாற்றையும் விரும்பி உட்கொள்கின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்பதால் இறக்குமதியை அதிகரிக்க வியாபாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment