Advertisment

திருமணம் செய்து கொள்வதாக அர்ச்சகர் மோசடி: லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை

கோயிலுக்கு வந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு லுக் அவுட நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோயிலுக்கு வந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகருக்கு லுக் அவுட நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோயிலுக்கு வந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்த வழக்கில் மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள கார்த்திக் முனுசாமி வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் விசாரணை செய்ய தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கோயில் பணியாளர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதற்கு முன்னதாக இனியொரு பெண்ணிற்கு தீர்த்ததிற்கு பதிலாக வேறு ஒன்றை குடிக்க கொடுத்து, அவர் மயக்கம் அடைந்ததும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் கார்த்திக் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment