Advertisment

கடும் வெயில், திடீர் மழை; இருமடங்கு அதிகரித்த காய்கறி விலை: பொதுமக்கள் கவலை

கடந்த மாதம் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது ரூ.250-க்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு, தற்போது ரூ.380-க்கு விற்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Koyembedu Market

காய்கறி விலை மேலும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Tamil Nadu: கடும் வெயில் மற்றும் தொடர் கனமழை காரணமாக காய்கறி விலை உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் பீன்ஸ், அவரைக்காய் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

Advertisment

கடந்த மாதம் கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் தற்போது ரூ.250-க்கு உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பூண்டு, தற்போது ரூ.380-க்கு விற்கப்படுகிறது.

கத்தரிக்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், சவ்சவ் உள்ளிட்ட பச்சை காய்கறிகளின் விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்து உள்ளது. இதனால், நடுத்தர மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெண்டை ரூ.50, புடலங்காய் ரூ. 70, கத்தரிக்காய் ரூ. 50, சவ்சவ் ரூ. 70-க்கும் விற்கப்படுகிறது.

இதனிடையே, காய்கறி விலை நிலவரம் கண்காணிப்பு குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோயம்பேடு, ஒட்டன்சத்திரம், கிருஷ்ணகிரி, நெல்லூர் உள்ளிட்ட சந்தைகளில் காய்கறி விலையை ஆய்வு செய்த பிறகே மற்ற பணிகளை மேற்கொள்கின்றனர், என்று தோட்டக்கலை துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

 தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment