கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26) சனிக்கிழமை கால அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மெட்ரோ ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை (ஆகஸ்ட் 26), சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.
அதன்படி, காலை 8 முதல் 11 மணி வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிஷ இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.
அதுபோல, காலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 7 நிமிஷ இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிஷ இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“