Advertisment

திமுக உடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை திருப்தி: கே.எஸ் அழகிரி

காங்கிரஸ் ஏற்கனவே போட்டிட்டு வென்ற சில தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாக அப்போது பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் ஒரு சில தொகுதிகளை..

author-image
WebDesk
New Update
KS Alagiri

திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக காங்கிரஸ் கட்சிகள் சீட் பகிர்வு பேச்சுவார்த்தையில் இன்று ஈடுபட்டன. காங்கிரஸ் ஏற்கனவே போட்டிட்டு வென்ற சில தொகுதிகளில் திமுக போட்டியிட விரும்புவதாக அப்போது பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதேபோல் ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு விட்டுக் கொடுக்கவும் திமுக விரும்புகிறது. இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர்கள் செல்வ பெருந்தகை, மாணிக்கம் தாகூர், செல்லகுமார் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை முடிந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கேஎஸ் அழகிரி, “முதல்கட்ட பேச்சுவார்த்தை சமூகமாக நடந்தது” எனக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu Congress Dmk K S Alagiri
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment