/tamil-ie/media/media_files/uploads/2022/11/ku-ka-selvam-1.jpg)
பா.ஜ.க.,விலிருந்து விலகி மீண்டும் தி.மு.க.,வில் இணைந்துள்ள கு.க.செல்வம் தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க.,வில் தலைமை நிலைய அலுவலக செயலாளராக இருந்தவர் கு.க.செல்வம். அப்போது தி.மு.க தலைவர் ஸ்டாலின் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நெருங்கி பழகி வந்தார். தொடர்ந்து சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் கடந்த 2016-ல் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.
இதையும் படியுங்கள்: தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு புதிய உறுப்பினர்கள் பட்டியல்: தயாநிதிக்கு அணி செயலாளர் பதவி
பின்னர் கட்சி பதவி விவகாரத்தில் அதிருப்திடைந்த கு.க.செல்வம் தி.மு.க.,வை விட்டு விலக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்தநிலையில், திடீரென டெல்லி சென்று அப்போதைய தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மூலம் பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். அப்போது தி.மு.க.,வையும் விமர்சித்து பேசினார்.
இதனைத் தொடர்ந்து தி.மு.க.,வின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கு.க.செல்வம் நீக்கப்பட்டார். பின்னர் அவர் 2020-ல் பா.ஜ.க.,வில் சேர்ந்தார். பா.ஜ.க.,வில் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார். இருப்பினும், பா.ஜ.க.,வில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க.,வில் இருந்து விலகி மீண்டும் தி.மு.க.,வில் இணைந்த கு.க.செல்வம் தி.மு.க.,வின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.