/tamil-ie/media/media_files/uploads/2021/10/bribes.jpg)
குன்றத்தூர் நகராட்சியின் பெண் ஆணையர் மீது லஞ்ச புகார் எழுந்துள்ளது.
சென்னையை அடுத்த குன்றத்தூர் நகராட்சியின் ஆணையராக இருந்து வந்தவர் குமாரி. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது. அதாவது நிலம் வரன்முறைப்படுத்த ரூ.24 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பொறி வைத்து பிடித்தனர். அவருடன் நகர அமைப்பு அதிகாரி பாலசுப்பிரமணி மற்றும் அலுவலக உதவியாளர் சாம்சன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர்களை கைது செய்த காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருங்குடியை சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவரின் வீட்டு மனைகளை வரன்முறை படுத்த மனு அளித்திருந்த நிலையில், அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
அதாவது ஒரு வீட்டு மனைக்கு ரூ.12000 வீதம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முதலில் சம்மதித்த முனுசாமி தன்னிடம் ரூ.12000 இல்லை எனவும்; ரூ.8000 தருவதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி 3 வீட்டு மனைகளுக்கு ரூ.8000 வீதம் ரூ.24 ஆயிரம் அளிக்க முன்வந்துள்ளார். தொடர்ந்து இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரி கலைச்செல்வன், அவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
அந்த ரூபாய் நோட்டுகளை வாங்கும் போது அதிகாரிகள் கையும் களவுமாக சிக்கினார்கள். அவர்களுடன் உதவியாளர் ஒருவரும் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.