Advertisment

சாதி மதம் பார்ப்பவள் நான் அல்ல; காங்கிரஸ் விளம்பர போராட்டம்: குஷ்பு

ஒரு பெண் என்றும் பாராமல் தி.மு.க.வினர் என்னை பொதுமேடையில் அவமானப்படுத்தினர். அப்போது இவர்கள் யாரும் பெண்களுக்கு ஆதரவாக பெங்கவில்லையே? என குஷ்பு கேள்வியெழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
kushboo young age photo, kushboo teen age photo viral, kushbu teen age photo viral, kushbu 14 old year photo, குஷ்பு, குஷ்பு சிறுவயது புகைப்படம், குஷ்புவின் 14வயது புகைப்படம் வைரல், தமிழ் சினிமா செய்திகள், ksuhoo tweet her young photo, actress kushboo, actress kushbu, latest tamil cinema news, latest cinima news, tamil cinema news

சாதி, மதம் பார்ப்பவள் நான் அல்ல; காங்கிரஸின் விளம்பர போராட்டத்துக்கு வாழ்த்துகள் என குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக குஷ்பு கருத்து தெரிவிக்கையில் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் அறிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குஷ்பு வீட்டின் அருகில் உள்ள மற்றொரு தெருவில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, தாம் தெரிவித்த கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை. மன்னிப்பும் கேட்க மாட்டேன்” எனத் தெரிவித்தார்.

Advertisment

Kushboo joins BJP Tamil News

தொடர்ந்து அவர் பேசுகையில், “1986ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டில் வசித்துவருகிறேன். நான் மானமுள்ள வீரமுள்ள தமிழச்சியாக வாழ்ந்துவருகிறேன்.

முதலில் சேரி என்பதற்கு என்ன அர்த்தம் எனக் கூறுங்கள். காங்கிரஸார் என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் இரண்டு நாள்கள் விளம்பரம் கிடைக்கும் என நினைத்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை அனைத்து மக்களும் எனக்கு ஒன்றுதான். நான் எல்லோரிடமும் சரிக்கு சமமாக பழகுவேன். எல்லோரிடமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கம் எனக்கு உண்டு.

தலித்துக்களுக்கு ஆதரவான போராட்டம் என்கிறார்கள். கோவையில் இரும்பு கம்பியால் தலித் தாக்கப்பட்டுள்ளார். அவர்கள் வீட்டு வாசலில் சென்று ஏன் போராடவில்லை? விளம்பரம் கிடைக்காது என்ற தயக்கமா?

tamil nadu assembly elections results, BJP, BJP candidate Kushbhu, thousand lights assembly election results, Doctor Ezhilan, பாஜக, நடிகை குஷ்பு, பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதி, டாக்டர் எழிலன், திமுக, dmk winning status, aiadmk election result, dmk vote countin reading, dmk elections results

நான் தவறு செய்தால் குழந்தையிடம் கூட மன்னிப்பு கோருவேன். தவறு செய்யாவிட்டால் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் மன்னிப்பு கோர மாட்டேன். அதை எதிர்பார்க்காதீர்கள், ஏமாந்து போவீர்கள்” என்றார்.

தொடர்ந்து, “திமுகவினர் என்னை பொதுமேடையில் கூட அநாகரீகமாக அவமானப்படுத்தினார்கள். அப்போது இவர்கள் யாரும் பொங்கவில்லையை” என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Kushboo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment