10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 11 லட்சம் கோடி அளித்தது மத்திய அரசு - எல்.முருகன்

இரண்டாவது முறையாக மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற எல். முருகன், இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொது, மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 11 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று எல். முருகன் கூறினார்.

இரண்டாவது முறையாக மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற எல். முருகன், இன்று கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொது, மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 11 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது என்று எல். முருகன் கூறினார்.

author-image
WebDesk
New Update
annamalai l murugan

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ளார். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர் எல். முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு, சென்னை வந்த எல். முருகனுக்கு விமான நிலையத்தில் பா.ஜ-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisment

சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் எல். முருகன்,  “தூர்தர்ஷன் என்றாலே நம்பிக்கையான செய்தி என்கிற எண்ணம் மக்களுக்கு உள்ளது. அதுபோல எல்லா ஊடகங்களும் செயல்பட வேண்டும். பிரேக்கிங் என்ற பெயரில் தவறான செய்திகளை பரப்பக் கூடாது. அப்படிப்பட்ட செய்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று எல். முருகன் கூறினார்.

இதையடுத்து, சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைமை அலுவலகம் கமலாலயத்துக்கு வந்த எல். முருகனுக்கு மலர் தூவி, மேள தாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், கட்சி நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

கமலாலயத்தில் பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியதாவது: “தமிழகத்தின் உரிமைகளைக்  கேட்டுப் பெறுவோம். தமிழகத்தில் இருந்து பல மாணவர்கள் நீட் தேர்வில் அசத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ. 11 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Advertisment
Advertisements

செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது: “சரித்திர சாட்சியாக பிரதமர் மூன்றாவது முறையாக பதிவேற்றுள்ளார். எல்.முருகன் தமிழகத்துக்கு இணைப்பு பாலமாக உள்ளார். இரண்டு முக்கியமான பொறுப்புகள் இன்று அவர் கையில் இருக்கிறது. தி.மு.க-வினர் ஜூன் 14 வெற்றி விழா கொண்டாட திட்டம் வைத்து இருந்தார்கள். ஆனால், செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். எனவே, ஜூன் 15 வெற்றி விழா கொண்டாட உள்ளனர். கோயம்புத்தூர் வளர்ச்சியை நசுக்கியது தி.மு.க தான்.

ஈரோட்டில் நடந்த இடைத்தேர்தலைப் போல், விக்கிரவாண்டி தேர்தலில் இருக்கக் கூடாது. அங்கு பா.ம.க வேட்பாளர் பா.ஜ.க சார்பாக நிற்க உள்ளனர். அதற்காக நாங்கள் கடுமையாக உழைக்க உள்ளோம். அனைத்து தலைவர்களும் ஒரு மனதாக இந்த முடிவை எடுத்துள்ளோம். தமிழிசை சௌந்தரராஜன் கட்சியின் மூத்த தலைவர், தேர்தலில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தலைவராக அவர் இருந்தார். இருப்பார். அமித்ஷாவின் பேச்சு அன்பானதாக இருக்கும். அவர் அவ்வாறுதான் பேசுவார். அதை கண்டிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது” இவ்வாறு பேசினார். 

முன்னதாக எல். முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட விழா மேடையில் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தின் குரலாக எல். முருகன் குரல் இருக்கும். தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போது பா.ஜ.க தனது பணியை செய்து முடித்திருக்கும். பிரதமர் மோடியிடம் தவறான மனிதர்கள் நெருங்க முடியாது. நல்ல மனிதர்களைத் தான் அவர் அருகில் வைத்திருப்பார். எல். முருகனுக்கு இரண்டாவது முறையாக பொறுப்பு கிடைத்திருக்கிறது. பிரதமர் அரசாங்கத்தின் இரண்டு துறைகளை எல். முருகனுக்கு வழங்கி உள்ளார்கள்.

தமிழ்நாட்டில் வாக்கு சதவீதத்தை உயர்த்தியுள்ளோம். பொறுமையாக தான் சில விஷயங்களை செய்ய முடியும். இந்த நேரத்தில் தான் நம்முடைய உழைப்பு இரட்டிப்பாக இருக்க வேண்டும். தொண்டர்கள் தலைவர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நேரம் இது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 500 நாட்கள் தான் உள்ளது. ஒரு நல்ல, நேர்மையான அமைச்சர் எந்த ஒரு தவறும் சொல்ல முடியாத அளவுக்கு தனது பணியில் செயல்படக்கூடிய அமைச்சர் எல்.முருகன்.

கட்சியைப் பற்றி வேறு விதமாக பேசுவதை குப்பையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  கட்சியை பற்றி நன்றாக பேசுவதை உரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போது நாம் அனைவரும் அவரை உற்சாகமாக வரவேற்க வேண்டும், அதற்கான நாள் குறைவாக தான் உள்ளது” என்று அண்ணாமலை கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

L Murugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: