Advertisment

இல்லாத பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த தி.மு.க அரசு நெருக்கடி - எல். முருகன் விமர்சனம்

“இல்லாத பேருந்து நிலையத்தில், ஆம்னி பேருந்துகளை நிறுத்த தி.மு.க அரசு நெருக்கடி தருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
L Murugan

மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த ஆம்னி பேருந்துகளை, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆம்னி பேருந்துகளை அவசரகதியில் மாற்றுவதா என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

சென்னையில் மாநகரத்துக்குள் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக,  சென்னைக்கு வெளியே வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையமான கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், ஜனவரி 25 முதல் ஆம்னி பேருந்துகள் சென்னை நகரத்திற்குள் பயணிகளுடன் வர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே வரதராஜபுரத்தில் அம்னி பேருந்துகளுக்கு என தனியாக பார்க்கிங் வசதி தயாராகும் வரை ஆம்னி பேருந்துகளை பயணிகளுடன் கோயம்பேடு வரை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

இதனிடையே, புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ஜனவரி 25-ம் தேதி முதல் கட்டாயமாக கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். மக்களுக்காக தான் அரசு செயல்படும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்காக செயல்பட முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். 

அதே நேரத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை, ஏற்கெனவே, 2 லட்சம் பயணிகள் சென்னை மாநகருக்குள் பல்வேறு இடங்களில் இருந்து முன்பதிவு செய்திருக்கிறார்கள் அவர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து பயணம் செய்வது சிரமமாக இருக்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. 

அதே போல, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரும், இனி ஆம்னி பேருந்ந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்துதான் இயக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார். இருப்பினும், ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சிலர், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அவசர கதியில் மாற்றுவதா? என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  “இல்லாத பேருந்து நிலையத்தில், ஆம்னி பேருந்துகளை நிறுத்த தி.மு.க அரசு நெருக்கடி தருகிறது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இதனிடையே, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று 440 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன; 90% ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளனர். மார்ச் மாத இறுதிக்குள் முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிருத்தம் ஏற்படுத்தப்படும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

L Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment