Advertisment

அடிப்படை வசதிகள் இல்லை... சபரிமலை பக்தர்கள் விஷயத்தில் கேரள அரசு தோல்வி - எல். முருகன் குற்றச்சாட்டு

சபரிமலை பக்தர்கள் விஷயத்தில் கேரள அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
L Murugan maalai

எல். முருகன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சபரிமலை பக்தர்கள் விஷயத்தில் கேரள அரசு தோல்வி அடைந்துவிட்டதாகவும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். 

Advertisment

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மகர ஜோதியை முன்னிட்டு லட்சக் கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருவதால் அங்கே பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சபரிமலையில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஊடகங்களிடம் கூறியதாவது: “பக்தர்களுக்கு சரியான அடிப்படை வசதிகள் இல்லை, பக்தர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுகிறார்கள். பக்தர்கள் அவதிக்குள்ளாகின்ற சூழ்நிலைதான் இருந்துக்கொண்டிருந்தது. பக்தர்களின் வருகை 48 நாள் அல்லது 2 மாதங்கள்தான். ஆனால், திருப்பதிக்கு தினந்தோறும் பக்தர்கள் வருகிறார்கள். அதே மாதிரி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தினந்தோறும் லட்சக் கணக்கான மக்கள் வருகிறார்கள். அங்கெல்லாம் சிறந்த ஏற்பாடுகள் செய்ய முடிகிறது. ஆனால், கேரளா அரசாங்கம் பக்தர்கள் எதற்காக வருகிறார்கள், அவர்கள் வராமல் இருந்தால் நல்லது என்ற மனப்பான்மையுடன் தான் அந்த அரசாங்கத்தின் செயல்பாடு இருக்கிறது. மகர ஜோதி, குழந்தைகளும் பெண்களும் வராதீர்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவிப்பு கொடுப்பது என்பது அரசாங்கம் ஒரு தோல்வியுற்ற அரசாங்கமாக இருப்பதைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

L Murugan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment