/indian-express-tamil/media/media_files/2025/08/16/la-ganesan-death-live-updates-nagaland-governor-rss-veteran-bjp-leader-tamil-nadu-tamil-news-2025-08-16-18-30-30.jpg)
உடல்நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை உயிரிழந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசனின் உடல் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8-ம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், நேற்று வெள்ளிக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.
இதனிடடையே, இல.கணேசன் உடல் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், இன்று பிற்பகலில் அவரது உடல் இறுதி ஊர்வலத்துடன் கொண்டு செல்லப்பட்டு 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க முப்படை வீரர்கள் இறுதி மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ, அம்மாநில தலைமை செயலர், டி.ஜி.பி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இல.கணேசன் மறைவுக்கு நாகாலாந்து மாநிலம் 7 நாள் துக்கம் அனுசரிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- Aug 16, 2025 17:29 IST
இல.கணேசன் மறைவு - பிரியா விடை அளித்த உறவினர்கள்; முப்படை அதிகாரிகள் மரியாதை
மறைந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், அவரின் உடலுக்கு முப்படை அதிகாரிகள் மரியாதை செலுத்தினர்.
- Aug 16, 2025 16:14 IST
"இல.கணசன் மீது மரியாதை வைத்துள்ளோம்" - நைபியு ரியோ
"இல.கணசன் மீது மரியாதை வைத்துள்ளோம். மறைந்த ஆளுநர் இல.கணசன் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம்" என்று சென்னையில் நாகலாந்து முதல்வர் நைபியு ரியோ பேட்டியளித்துள்ளார்.
- Aug 16, 2025 15:36 IST
சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்
கட்சி பாகுபாடின்றி அனைவராலும் நேசிக்கப்பட்டவர் இல.கணேசன் என்று தெரிவித்துளளார் சரத்குமார்.
- Aug 16, 2025 15:34 IST
இல.கணேசனுக்கு சீமான் இரங்கல்
என்னையும், என் தமிழையும் வெகுவாக பாராட்டியவர் இல.கணேசன் என்று கூறி இரங்கல் தெரிவித்துள்ளார் சீமான்.
- Aug 16, 2025 13:07 IST
இல. கணேசன் உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி
நாகாலாந்து முன்னாள் ஆளுநர் இல. கணேசன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
#WATCH | Tamil Nadu Chief Minister MK Stalin and Deputy CM Udayanidhi Stalin pay last respect to Nagaland Governor La Ganesan, who passed away yesterday. pic.twitter.com/N8S8F4LvJP
— ANI (@ANI) August 16, 2025 - Aug 16, 2025 12:24 IST
ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி
ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
#JustNow | ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரில் அஞ்சலி! #SunNews | #LaGanesanRIP | #CMMKStalinpic.twitter.com/NwK6SZvOcf
— Sun News (@sunnewstamil) August 16, 2025 - Aug 16, 2025 12:19 IST
மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடல் இன்று மாலை தகனம்
நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்படுகிறது.
- Aug 16, 2025 11:32 IST
இல. கணேசன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மரியாதை
சென்னை | நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சரத்குமார், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
#WATCH | Chennai | Tamil Nadu BJP President Nainar Nagenthiran, Dravidar Kazhagam President, K Veeramani, BJP leader and actor Sarath Kumar, Hindu Makkal Katchi, President, Arjun Sampath, TN BJP leader Amar Prasad Reddy pay last respect to Nagaland Governor La Ganesan pic.twitter.com/Dc06EDLfQG
— ANI (@ANI) August 16, 2025 - Aug 16, 2025 11:26 IST
இல.கணேசன் உடலுக்கு மூவர்ண கொடி மரியாதை
மறைந்த ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு மூவர்ண தேசிய கொடி முப்படையினர் சார்பில் போர்த்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் அஞ்சலிக்காக நடேசன் பூங்காவிற்கு எதிரில் உள்ள மைதானத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது.
- Aug 16, 2025 09:31 IST
தி.நகரில் இல.கணேசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பு
சென்னை தியாகராய நகர் நடேசன் பூங்காவிற்கு எதிரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் இல.கணேசன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி வரை வைக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
- Aug 16, 2025 08:53 IST
இல.கணேசன் உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன், கனிமொழி அஞ்சலி
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
- Aug 16, 2025 07:17 IST
இல.கணேசன் மறைவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல்
நாகலாந்து மாநிலத்தின் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் மறைவு மிகுந்த கவலையளிக்கிறது. கருத்து முரண்களை கடந்து நட்பு பாராட்டும் நல்லியல்பு கொண்டவர் இல.கணேசன், பொதுவாழ்க்கைக்காக தனிவாழ்கையை அர்ப்பணித்தவர். 2001-ல் இல்லம் தேடி வந்து என்னை ஊக்கப்படுத்தியவர், அவருக்கு என் அஞ்சலியை செலுத்துகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
- Aug 16, 2025 00:45 IST
தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பு: எச்.ராஜா
தமிழகத்தை சேர்ந்த தீவிர தேசியவாதியும், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக நீண்ட காலம் தேசத்திற்காக பணியாற்றியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலந்து மாநில ஆளுநருமான மேதகு திரு.இல.கணேசன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும் வேதனையளிக்கிறது என எச்.ராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த தீவிர தேசியவாதியும், தமிழ் மீது தீராத பற்று கொண்ட பொற்றாமரை நாயகரும், ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக நீண்ட காலம் தேசத்திற்காக பணியாற்றியவரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நாகாலந்து மாநில ஆளுநருமான மேதகு திரு.இல.கணேசன் அவர்கள் காலமானார் என்கிற செய்தி மிகவும்… pic.twitter.com/LSQXzXD8Ff
— H Raja (@HRajaBJP) August 15, 2025 - Aug 15, 2025 22:01 IST
இல.கணேசன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி
மறைந்த நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- Aug 15, 2025 20:15 IST
ஒ.பி.எஸ் இரங்கல்
அன்புச் சகோதரர் திரு. கணேசன் அவர்கள் தான் கொண்ட கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்தவர். அனைவரிடத்திலும் அன்புடன் பழகக் கூடியவர். மிகச் சிறந்த பண்பாளர். இவருடைய இழப்பு தமிழ் இலக்கியவாதிகளுக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் பேரிழப்பு. நாடு ஒரு சிறந்த தேசியவாதியை இழந்துவிட்டது என முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவரும், நாகாலாந்து மாநில ஆளுநரும், மிகச் சிறந்த இலக்கியவாதியுமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 15, 2025
அன்புச் சகோதரர் திரு. கணேசன் அவர்கள் தான் கொண்ட… - Aug 15, 2025 19:58 IST
அண்ணாமலை இரங்கல்
பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும் கடுமையாக உழைத்தவர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் பரவலாக அறியப்பட்டவர். எளிமையான மனிதர். ஆழ்ந்த சிந்தனைவாதியாகத் திகழ்ந்தவர்.
ஐயா திரு. இல. கணேசன் அவர்கள் மறைவு, தமிழ்ச் சமூகத்துக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!" என்று தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து மாநில ஆளுநரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவருமான, ஐயா திரு. இல. கணேசன் அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
— K.Annamalai (@annamalai_k) August 15, 2025
தமிழகத்தில், பாஜக வளர்ச்சிக்காகவும், தமிழக நலனுக்காகவும்… pic.twitter.com/vXNanLofp2 - Aug 15, 2025 19:55 IST
வைரமுத்து இரங்கல்
கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில், "நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் அவர்களின் மறைவு துயரம் தருகிறது. யாரையும் புண்படுத்தாத பண்பட்ட அரசியல் தலைவர். பாரதிய ஜனதா கட்சியில் ஓர் இலக்கியவாதி. ஆன்மிக இலக்கியம் வளர்ப்பதற்காகவே பொற்றாமரை என்ற களம் கண்டவர்; என்னையும் அழைத்துப் பேசவைத்தவர்.
நாகாலாந்து வாருங்கள் காணாத இயற்கை கண்டு கவிதை எழுதலாம் என்று ஆசையோடு அழைத்தவர். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது உரையின் திறம்பற்றிச் சொல்லிக் கரம்பற்றிப் பாராட்டினேன். மறைவு எதிர்பாராதது. போய் வாருங்கள் நல்லவரே. தாமரை மட்டுமல்ல சூரியனும் துக்கம் கேட்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து ஆளுநர்
— வைரமுத்து (@Vairamuthu) August 15, 2025
இல.கணேசன்
அவர்களின் மறைவு
துயரம் தருகிறது
யாரையும் புண்படுத்தாத
பண்பட்ட அரசியல் தலைவர்
பாரதிய ஜனதா கட்சியில்
ஓர் இலக்கியவாதி
ஆன்மிக இலக்கியம்
வளர்ப்பதற்காகவே
பொற்றாமரை என்ற
களம் கண்டவர்;
என்னையும் அழைத்துப்
பேசவைத்தவர்
நாகாலாந்து வாருங்கள்
காணாத இயற்கை கண்டு… pic.twitter.com/rrdSckUfie - Aug 15, 2025 19:28 IST
இல. கணேசன் அரசியல் பின்னணி என்ன?
தென்னிந்தியாவின் மிக முக்கியமான ஆர்.எஸ்.எஸ் தலைவரும், பா.ஜ.க-வின் தமிழக முன்னாள் தலைவருமானவர் இல. கணேசன். 1990களின் முற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து பா.ஜ.க-வுக்கு மாறினார். அப்போது அவர் கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்ற அனுப்பப்பட்டார். 2003 வரை அந்தப் பதவியை வகித்தார்.
தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளைப் பேசும் பன்மொழிப் புலமை பெற்ற கணேசன், கட்சியை அதன் கடினமான காலங்களில் வெற்றி பெறச் செய்தார். அவரது பதவி காலத்தில், பா.ஜ.க ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்தது, ஆனால் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. அந்த அரசாங்கம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.
பின்னர், சோ ராமசாமியுடன் சேர்ந்து, கணேசனும் தி.மு.க-வை பா.ஜ.க பக்கம் இழுத்த பெருமையைப் பெற்றார். இலங்கை, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோருடன் பா.ஜ.க தொடர்புகளை வளர்க்க அவர் உதவியதாகவும் நம்பப்படுகிறது.
இப்போதுள்ள மாநில பா.ஜ.க தலைவர்களைப் போலல்லாமல், கணேசன், கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் நல்லுறவை பேணி வந்தார். தமிழ்நாட்டில், அரசியலில் சாதி ஒரு பங்கை வகிக்கிறது, தஞ்சாவூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த கணேசன், தனது சாதியை வெளிப்படுத்தாதற்கு பாராட்டப்பட்டார். சிக்கனமான வாழ்க்கை வாழ்ந்ததற்காகவும், சிறிய பையுடன் நகரும் தலைவராக இருப்பதன் நீடித்த பிம்பமாகவும் அவர் பாராட்டப்பட்டார்.
அவர் கட்சிக்காக பாடல்கள் உட்பட விரிவாக எழுதியுள்ளார், தமிழ்நாடு பா.ஜ.க-வின் “ஒரே நாடு (ஒரு தேசம்)” பத்திரிகையைத் திருத்தியுள்ளார். மேலும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் தமிழ் அறிஞர்களின் குழுவான “பொற்றாமரை (தங்கத் தாமரை)” ஐத் தொடங்கினார்.
- Aug 15, 2025 19:19 IST
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் மரணம்
நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்து வந்தவர் இல.கணேசன். இவர், சென்னையில் உள்ள தனது வீட்டில் கடந்த 8 ஆம் தேதி திடீரென மயங்கி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இல.கணேசன், இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- Aug 15, 2025 19:19 IST
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு நேரலைக்கு அன்புடன் வரவேற்கிறோம்!
நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்தப் பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.