Advertisment

நிலமோசடி வழக்கு; கை விரித்த கோர்ட்: கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது

நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
land grabbing case Former AIADMK Minister MR Vijayabaskar Arrested in Kerala Tamil News

100 கோடி ரூபாய் மதிப்பிலான நில மோசடி வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் நிலத்தை, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Advertisment

அந்தப் புகாரில், "அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், என்னுடைய மனைவி, மகள் பெயர்களில் உள்ள சொத்துகளை அபகரித்துக் கொண்டனர். அந்த சொத்துகளை எனது மனைவி, மகளை மிரட்டி பத்திரப்பதிவும் செய்துக் கொண்டனர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.100 கோடி ஆகும்" என்று பிரகாஷ் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடியானது. இதனிடையே, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், நிலமோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் நேற்று திங்கள்கிழமை மனுத்தாக்கல் செய்தனர். 

அதில், ''புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளனர். இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த சூழலில், ஒரு மாதத்திற்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்ததால், சி.பி.சி.ஐ.டி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் கேரளாவில் வைத்து எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Mr Vijayabaskar Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment