New Update
/indian-express-tamil/media/media_files/L6GJG1N4SwNWo5J0i7ZP.jpg)
உத்தராகண்டின் தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.
உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் பல பகுதிகளில் நிலச்சரிவு பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே அங்குள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு தமிழகத்தில் இருந்து சிலர் புனித பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.
இதன் காரணமாக புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மலை பகுதியில் இருந்து கீழே வரமுடியாமல் தவிக்கின்றனர். மலைப் பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், நிலச்சரிவில் சிக்கியுள்ள கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 30 பேரையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவிக்கையில், ‘உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளனர். ஆன்மீகப் பயணிகள் 30 பேருக்கும் தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் இவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வானிலை நிலவரம் எப்படி இருக்கும்? என கவனித்த பின்னர் அதற்கேற்ப அவர்கள் ஊர் திரும்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சமூக நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறுகையில், “நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தமிழர்களை மீட்க உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.