தமிழகத்தில் ‘மொழிப் போர்’: ‘பாரதம் எழுச்சி பெறுவதில் சில சக்திகளுக்கு மகிழ்ச்சி இல்லை’ - ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், மற்ற தென்னிந்திய மொழிகளைக் கூட படிக்க அனுமதிக்கவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையில் நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rn ravi language

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி (புகைப்படம் – ராஜ்பவன் எக்ஸ் பக்கம்)

Arun Janardhanan

Advertisment

தமிழ் துறவி அய்யா வைகுண்டருக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் ஆற்றிய உரையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநிலத்திற்குள் நடத்தப்படும் "மொழிப் போர்" என்று அவர் கூறி வருவதற்கு எதிராக எச்சரித்தார். சனாதன தர்மம் மற்றும் மறுமலர்ச்சி பாரதம் பற்றிய பரந்த கதையை மையமாகக் கொண்ட அவரது உரையில், தமிழக இளைஞர்களின் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கு இடையூறாக அமைந்ததிருப்பதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டின் நீண்டகால இருமொழிக் கொள்கையை கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

வைகுண்டரின் ஆன்மிக மரபைக் கொண்டாடும் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, “பாரதமும் சனாதன தர்மமும் பிரிக்க முடியாத இரண்டு பகுதிகள். சனாதன தர்மத்திற்கு ஆபத்து என்றால் பாரதத்திற்கு அச்சுறுத்தல் என்று அர்த்தம்” என்று கூறினார். அவரது உரை இந்தியாவின் மத மற்றும் கலாச்சார நெறிமுறைகளைத் தொட்டாலும், அவரது பேச்சு மொழியின் அரசியலுக்கு மாறியது.

Advertisment
Advertisements

தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020-ன் கீழ் இந்தி திணிக்கப்படுவதாகக் கூறி, மத்தியிலுள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு மோதலில் ஈடுபட்டுள்ள நேரத்தில் ஆளுநரது கருத்துக்கள் வந்துள்ளன.

"நாட்டிற்கு வெளியேயும் உள்ளேயும் - பாரதம் எழுச்சி பெறுவதில் மகிழ்ச்சியடையாத சக்திகள் உள்ளன," என்று கூறிய ஆளுநர், இந்த சக்திகள் இன மற்றும் மொழி அடிப்படையில் தேசத்தை பிளவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று குற்றம் சாட்டினார். பிரிட்டிஷ் காலனித்துவ தந்திரோபாயங்களுக்கு இணையாக இருப்பதாகக் குறிப்பிட்டு, "அவர்கள் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சிக்கிறார்கள்... இவை அனைத்தும் சனாதனத்திற்கு எதிரான சக்திகள், ஆனால் சனாதனம் நிரந்தரமானது என்று அவர்களுக்குத் தெரியாது," என்று ஆளுநர் கூறினார்.

"யாரும் எந்த மொழியையும் இன்னொருவர் மீது திணிக்கவில்லை" என்று ஆளுநர் உறுதியளித்தார், மேலும் தமிழ்நாட்டின் மேலாதிக்க அரசியல் கதைக்கு சவால் விடுத்தார். திராவிடக் கட்சிகள் நீண்ட காலமாக பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை கட்டாயமாக்கும் இரு மொழிக் கொள்கையை ஆதரிக்கின்றன, அதே நேரத்தில் இந்தி சேர்க்கப்படுவதை எதிர்க்கின்றன.

“இந்தியாவில் மொழியைத் தேர்ந்தெடுக்க மக்கள் சுதந்திரமாக உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, நம் மாநிலத்தில், மக்களுக்கு அந்த சுதந்திரம் இல்லை,” என்று தி.மு.க தலைமையிலான மாநில அரசாங்கத்தை ஆளுநர் ஆர்.என் ரவி மறைமுகமாக விமர்சித்தார். “பிரச்சினைகளை உருவாக்கி, பொய்களைப் பரப்பி தூண்டிவிடக் கூடாது. போர் இல்லை. திணிப்பு இல்லை. ஆனால் மக்கள் தாங்கள் படிக்க விரும்பும் மொழியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும்,” என்று ஆளுநர் கூறினார்.

வெள்ளிக்கிழமை ராஜ் பவனால் வெளியிடப்பட்ட அறிக்கை, தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை "கடுமையானது" என்று விவரித்தது. அண்டை மாநிலங்களில் உள்ள மாணவர்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் உள்ள மாணவர்கள் வாய்ப்புகளை "பெரிய அளவில் இழந்துள்ளனர்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் ராஜ் பவன் வெளியிட்ட பதிவில் ஆளுநருக்கும், தலைவர்கள், தொழில்முனைவோர் மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. “துரதிர்ஷ்டவசமாக, இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், மற்ற தென்னிந்திய மொழிகளைக் கூட படிக்க அனுமதிக்கவில்லை என்று இளைஞர்கள் நினைக்கிறார்கள். இது உண்மையில் நியாயமற்றது. நமது இளைஞர்களுக்கு மொழிகளைக் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Governor Rn Ravi Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: