லேட்டரல் என்ட்ரி: சமூக நீதி மீதான தாக்குதல் : ஸ்டாலின் கண்டனம்

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதி மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதி மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Tamil News Today: முதலமைச்சர் ஸ்டாலின் பேசும் ஆடியோ சீரிஸ்: காலை 7 மணிக்கு வெளியானது

லேட்டரல் என்ட்ரி என்பது சமூக நீதி மீதான தாக்குதல் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில் “ சமூநீதியை நிலைநாட்டவும், இட இதுக்கீட்டைப் பாதுகாத்து அது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் கீழ்க்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொண்டாக வேண்டும். 
லேட்டரல் என்ட்ரி என்பது சமூகநீதியின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். தகுதிமிக்க பட்டியல் பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்ட  மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அலுவலர்களுக்குரிய வாய்ப்புகளை உயர்மட்டத்தில் தட்டிப் பறிப்பதாகும். 
மத்திய அரசு இதனைக் கைவிட்டு, நிரப்பப்படாமல் இருக்கும் ஓ.பி.சி, எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்குரிய பணியிடங்களை நிரப்புவதற்கு  முன்னிரிமை அளிக்க வேண்டும். நியாயமான, சமத்துவமான முறையில்  பதவி உயர்வு வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும். 
தொடக்கத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிற க்ரீமி லேயர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். அதற்கு முன்பு, பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் க்ரீமி லேயருக்கான வருமான உச்ச வரம்பை இனியும் தாமதிக்காமல் உடனடியாக உயர்த்திட  வேண்டும். 
அனைத்திற்கும் மேலாக, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வரலாறு நெடுக தங்களுக்குரிய பங்கு மறுக்கப்பட்ட நம் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் நியாயமான முறையில் பகிர்தளிக்க இது கட்டாயமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: