Weather News: தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கீழ் காற்றில் (Easterly) ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக டெல்டா, காரைக்கால் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
விஜய்யின் பிகில் வசூலைத் தாண்டாத ரஜினியின் தர்பார்; உண்மை நிலவரத்தைக் கூறும் விநியோகஸ்தர்..
மீனவர்களுக்கான எச்சரிக்கை: வடகிழக்கு திசையிலிருந்து வலுவான காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வீச வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.