Advertisment

சி.ஏ.ஏ சட்டம் சொல்வது இதுதான் : வழக்கறிஞர் சண்முகம் விளக்கம்

சி.ஏ.ஏ"இந்த சட்டத்தால் பாதுகாப்பு இல்லை என்று ஒரு அச்சம் மக்களிடையே நிலவுவதாகவும், இந்தத் திட்டம் கூறுவது ஒரு பக்கத்தில் முடிந்து விடும் என்று வழக்கறிஞர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
அசச்
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சி.ஏ.ஏ"இந்த சட்டத்தால் பாதுகாப்பு இல்லை என்று ஒரு அச்சம் மக்களிடையே நிலவுவதாகவும், இந்தத் திட்டம் கூறுவது ஒரு பக்கத்தில் முடிந்து விடும் எனவும் ஏற்கனவே இருந்த குடியுரிமை சட்டத்தில் சில திருத்தங்களை மட்டுமே மத்திய அரசு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பாக பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இந்த மூன்று இஸ்லாமிய நாடுகளிலும் மதரீதியாக துன்புறுத்தப்பட்டோ அல்லது துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்திலோ அங்கு சிறுபான்மையினராக வாழ்ந்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஜெயின் மதத்தினர், சீக்கியர்கள், பார்சி, புத்த மதத்தினர் ஆகியோர் இங்கு வந்திருந்து 2014 டிசம்பர் 31க்கு முன்பு இங்கு வசித்து இருந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.

Advertisment

 அவர்கள் மீது ஏதேனும் குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவை கைவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களை கட்டுப்படுத்தாது, அவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே இந்திய குடிமக்கள் தான். அவர்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பும் உள்ளது. அந்த மூன்று நாடுகளில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினர்கள் எனக் கூறும் மதத்தினர்களில் ஒருவர்களான கிறிஸ்தவர்கள், இந்தியாவில் மிகப் பெரும்பான்மையாக இருப்பவர்கள். அவர்களுக்கு இது பலனளிக்கும். அதுமட்டுமின்றி இதர ஐந்து மதத்தினருக்கும் பலன் அளிக்கும். மத்திய அரசு கொண்டு வந்ததை மாநில அரசுகள் தடுக்க முடியாது.

 குறிப்பாக தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் கிடையாது. இருப்பினும் மக்களுக்கு வரக்கூடிய அச்சத்தை தெளிவுபடுத்த வேண்டியது ஆட்சியாளர்களிடம் தான் உள்ளது. ஆனால் அவர்கள் இது குறித்து எந்த விபரங்களையும் சொல்ல மறுக்கிறார்கள். அதற்கு காரணம் அரசியல் தான். பல இடங்களில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் என பல ஆவணங்களை தயாரித்து இந்தியப் பிரஜைகளாகவே வாழ்கிறார்கள் அதுமட்டுமின்றி இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டு இந்தியர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள் ஏதேனும் குற்ற சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டு விசாரணை மேற்கொள்ளும் பொழுது தான் முழு விவரங்கள் தெரிய வருகிறது. இதையெல்லாம் வரைமுறை படுத்தும் பொழுது தான் அரசாங்கத்தின் நிதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மக்களுக்கு கொடுக்க முடியும்.

 சில அரசியல் கட்சிகள் இதனை வேண்டாம் என்று கூறும் பொழுது பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு தான் ஏற்படும். ஏழாம் எட்டாம் வகுப்புகளிலேயே வாழ்வியல் சட்டங்களை கல்வியில் கொண்டு வர வேண்டும் அப்பொழுதுதான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் எனத் இவ்வாறு வழக்கறிஞர் சண்முகம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்தி: பி.ரஹ்மான், கோவை 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment